shadow

ஹாசினி-தாய் கொலைகாரன்: தலைமறைவாக இருந்த தஷ்வந்த் மும்பையில் கைது

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவனும், பணத்திற்காகவும், நகைக்காகவும் பெற்ற தாயையே கொலை செய்த கொடூரனாகவும் இருந்த தஷ்வந்த் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று மும்பையில் அதிரடியாக போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சிறுமி ஹாசினி பாலியல் பலாத்கரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்தபோதும் தஷ்வந்த் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யமால் காலம் தாழ்த்திய போலீசாரின் மெத்தனபோக்கை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் சுட்டிகாட்டி ரத்து செய்தனர். தொடர்ந்து தஷ்வந்தை ஜாமினிலும் விடுவித்தனர்.

ஜாமீனில் வெளிவந்து மேலும் ஒரு கொலையை அதுவும் பெற்ற தாயையையே ரூ.20 ஆயிரம் பணத்திற்கு கொலை செய்த தஷ்வந்தை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தஷ்வந்த் மும்பையில் பதுங்கியிருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து மும்பை சென்ற தனிப்படையினர் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இனியாவது காவல்துறை முறையாக செயல்பட்டு தஷ்வந்துக்கு கடும் தண்டனை பெற்று தரவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply