ஹாங்காங்கில் 2-வது நாளாக விமானங்கள் ரத்து

ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய அனைத்து விமானங்களும் நேற்று ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் ரத்து செய்யப்பட்டதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஹாங்காங் நாட்டில் ஜனநாயகத்திற்காக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் ஏராளமானோர் விமான நிலையத்திற்குள் நுழைந்து விட்டதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது

உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் விமான பயணிகள் பொது மக்களின் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply