வீடியோகால் மூலம் இறுதிச்சடங்கு செய்த மகன்
ஹரியானா மாநிலத்தில் எஸ்பி நரிப்திக்சிங் என்பவர் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56.
இந்த நிலையில் அவருடைய ஒரே மகன் சந்தீப் சிங் கேரளாவில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வந்தார். இந்த கொரோனா காலத்தில் அவரால் உடனடியாக கேரளாவில் இருந்து ஹரியானா செல்ல முடியவில்லை
இதனை அடுத்து அவர் வீடியோகால் மூலம் தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்தார். இதுகுறித்து சந்திப்சிங் கூறியபோது தனது தந்தைக்கு கடைசியாக இறுதிச்சடங்கு கூட நேரில் செய்ய முடியவில்லை என்றும் அவருடைய உடலை ஒருமுறை கட்டிப்பிடிக்க கூட முடியவில்லை என்றும் அவர் கூறினார்
இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.