கடந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தபோது இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை அதனால் அவர்களை அணியில் இணைக்கவில்லை என்று தோனி கூறியதால், ஸ்ரீகாந்த் உள்பட பல முன்னாள் கிரிக்கெட்டர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் தோனியை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
ஆனால் இன்று வாய்ப்பு வழங்கப்பட்ட இளம் வீரர்களான கெய்க்வாட் மற்றும் ஜெகதீசன் ஆகிய இருவருமே சேர்ந்து ஐந்து பந்துகள் மட்டுமே சந்தித்து ஒரு ரன்கூட எடுக்காமல் டக்கில் அவுட் ஆகினர்.
எனவே தோனி சொன்ன ஸ்பார்க் விஷயம் ஒருவேளை உண்மையோ என்று எண்ண வைக்கின்றது. லட்சக்கணக்கான வீரர்களில் ஐபிஎல் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம். அந்த வாய்ப்பையும் ஒரு சதவிகிதம் கூட பயன்படுத்தாமல் இருந்தால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
Leave a Reply
You must be logged in to post a comment.