ஸ்டாலினை பார்த்து பதறிய மாபா.பாண்டியராஜன்: ரஜினி நகைச்சுவை பேச்சு
சென்னையில் நேற்று பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன்பாப்பையா எழுதிய ’புறநானூறு புதிய வரிசை வகை’ என்ற நூல் வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ஸ்டாலினை பார்த்து மாபா.பாண்டியராஜன் பதறியதாக நகைச்சுவையாக பேசினார்
‘சாலமன் பாப்பையா எழுதிய இந்த நூல் எல்லா அரசு நூலகங்களிலும் வைக்கப்பட வேண்டும் என இந்த விழாவில் திருச்சி சிவா பேசியதோடு அப்படி வைக்கப்படவில்லை என்றால் விரைவில் தளபதி முதல்வராக வந்து, இந்த நூலை நூலகங்களில் வைப்பார் என கூறினார்.
அடுத்த பேச வந்த அமைச்சர் மாபா.பாண்டியராஜன், ஸ்டாலின் வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் ஆட்சியிலேயே அனைத்து நூலகங்களிலும் இந்த நூல் கிடைக்கும்படி செய்வோம்’ என்று பதிலளித்தார்.
அடுத்து பேச வந்த நடிகர் ரஜினிகாந்த், ‘சிவா அவர்கள் பேசியபோது தளபதி வருவாரு, அப்போ இந்த நூல் நூலகங்களில் கிடைக்கும் என்று கூறினார். உடனே அமைச்சர் மாபா பாண்டியராஜன் பதறிப்போய் உடனே நூலகங்களில் இந்த நூலை வைக்க ஒப்புக்கொண்டார். மொத்தத்தில் இந்த நூல் நூலகங்களுக்கு செல்வது உறுதியாகிவிட்டது. அதற்கு என் சந்தோஷம்’ என்று நகைச்சுவையாக கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.