ஸ்டாலினால் பாஜகவின் கனவு தவிடுபொடியாகும்
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினை ஒருசில அரசியல் தலைவர்கள் மிகைப்படுத்தி பேசி வருவதாகவே தெரிகிறது.
பலவித ராஜதந்திரங்களை கையாண்ட கருணாநிதி அவர்களே பல தோல்விகளை பெற்ற நிலையில் ஸ்டாலின் எந்த அளவுக்கு தனது கட்சியை தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவார் என்று இன்னும் தெரியவில்லை. ஆனால் அதற்குள் அவரை பற்றி மிகைப்படுத்தி ஒருசில தலைவர்கள் பேசி வருகின்றனர்.
ஏற்கனவே வைகோ, வீரமணி உள்ளிடோர் ஸ்டாலின் குறித்து அதிகம் பேசிவிட்ட நிலையில் தற்போது திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் கூறியபோது, ‘நாடு முழுவதையும் காவிமயமாக்க முயற்சிக்கும் பாஜகவின் கனவை ஸ்டாலின் தவிடு பொடியாக்குவார் என்று கூறியுள்ளார். பாஜக தமிழகத்தில் பலவீனமாக இருந்தாலும் நாடு முழுவதும் வலிமையாக உள்ள ஒரு கட்சி. அந்த கட்சியை வெற்றி பெற வேண்டுமானால் ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட வேண்டும் என்பதே திமுக தொண்டர்களின் எண்ணமாக உள்ளது
திமுக, ஸ்டாலின், சுப வீரபாண்டியன், தேர்தல்
Leave a Reply
You must be logged in to post a comment.