ஷெரின் பெயரை என்னை தவிர யாரும் சொல்ல மாட்டாங்க: தர்ஷன்

பிக்பாஸ் வீட்டில் இன்று ஒரு போட்டியாளரை வெளியேற்ற நாமினேஷன் படலத்திற்கு பதிலாக இந்த வாரம் காப்பாற்றப்படும் நபர்கள் குறித்த விபரங்களை பிக்பாஸ் கேட்க ஒவ்வொருவராக கன்பக்சன் அறைக்கு வருகின்றனர்.

முதலில் வரும் தர்ஷன், தான் ஷெரினையும் சாண்டியையும் காப்பாற்ற விரும்புவதாக கூறுகிறார். ஷெரினை யாரும் காப்பாற்ற முன்வர மாட்டார்கள் என்பதால் நான் காப்பாற்ற விரும்புகிறேன் என்று தர்ஷன் கூறுகிறார்.

இரண்டு பேர்களை காப்பாற்ற வேண்டுமானால் இரண்டு பச்சை மிளகாய்களை சாப்பிட வேண்டும் என பிக்பாஸ் நிபந்தனை விதிக்க காரசாரமாக உள்ள பச்சை மிளகாயை தர்ஷன் சாப்பிடுகிறார். இனி மற்ற ஐந்து பேர்களும் யார் யாரை காப்பாற்ற போகின்றார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்

Leave a Reply