வேலைக்கு சேர்ந்தால் மதியம் ஒரு கட்டிங், இரவு ஒரு குவார்ட்டர்: ஒரு வினோத அறிவிப்பு

திருப்பூர் பின்னலாடை கம்பெனிகளில் வேலைக்குச் சேர ஆட்கள் கிடைப்பதில்லை என கம்பெனிகளின் உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர். அப்படியே வேலைக்கு சேர்ந்தாலும் ஒரு சில நாட்களில் வேலையை விட்டு சென்று விடுவதாகவும் அதிக சம்பளம் கொடுத்தும் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை கம்பெனியின் உரிமையாளர் ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி வேலைக்கு சேரும் ஒவ்வொருவருக்கும் சம்பளத்துடன் மதியம் ஒரு கட்டிங் மற்றும் இரவு ஒரு குவாட்டர் வழங்கப்படும் என்றும் அது போக டீக்காசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்

இதனை அவர் ஒரு வால்போஸ்டர் போல் ஒட்டி தனது நிறுவனத்தின் முன் வைத்துள்ளார். இந்த விளம்பரம் வெளியான ஒரு சில மணி நேரங்களில் அந்த கம்பெனிக்கு தேவையான அனைத்து வேலையாட்களும் கிடைத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து வேலைக்கு ஆள் கிடைக்காமல் தவிக்கும் மற்ற நிறுவனங்களும் இதே முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply