வேலூரில் நேருக்கு நேர் வந்த 2 ரயில்கள்: 100மீ இடைவெளியில் நிறுத்தப்பட்டது
வேலூர் காட்பாடி ரயில் நிலையம் அருகே குடிநீர் ரயிலும், பயணிகள் ரயிலும் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் இரண்டு ரயில்களையும் நிறுத்த உடனடியாக உத்தரவு பிறப்பித்தனர்.
இதனையடுத்து நேருக்கு நேர் வந்த 2 ரயில்களும் 100 மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து நேர்ந்திருந்தால் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கும் என இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
ரயில்வே அதிகாரிகளின் சமயோசிக புத்திசாலித்தனத்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ஒரே தண்டவாளத்தில் எப்படி இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் வந்தது என்பது குறித்த விசாரணை நடைபெறுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.