வேதியியல் துறையில் 3 பேருக்கு நோபல் பரிசு

2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் 2019 ஆம் ஆண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றோர் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டு வேதியியல் துறையில் 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எடை குறைவான லித்தியம் அயன் பேட்டரி உருவாக்கத்தில் பங்காற்றிய ஜான் குட் எனஃப், ஸ்டான்லி விட்டிங் கம், அகீரா யோசினோ ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கும் நோபல் பரிசு மூன்று பேர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply