shadow

வெள்ள நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற சீமானிடம் போலீசார் விசாரணை

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட பெரும் பேரிடரால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள நிலையில் பல்வேறு அமைப்புகள் கேரளாவுக்கு நிதியுதவியும் நிவாரண பொருட்களும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் கேரள மாநிலத்திற்கு நிவாரணப் பொருட்களை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் தனது கட்சியினர்களுடன் எடுத்து சென்றார். அவ்வாறு எடுத்துச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பார் சீமான் உள்ளிட்ட கட்சியினரை கோட்டயம் கிழக்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்தனர்.

பொருட்களில் சந்தேகம் இருப்பதால் பரிசோதிக்க வேண்டும் என்று கேரள காவல்துறை சந்தேகத்தின் பேரில் சீமான் உள்ளிட்டவர்களை பிடித்து சென்று விசாரித்தனர். அதன்பின்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் 4 மணி நேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply