வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெற்றி

குஜராத்தில் நடைபெற்ற மாநிலங்களவை இடைத் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்தவரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஜெய்சங்கர் வெற்றி பெற்றார். அவருடன் இதே மாநிலத்தில் இருந்து மற்றொரு பாஜக வேட்பாளரான ஜூகல் தக்கோர் அவர்களும் வெற்றி பெற்றார்.

மத்திய அமைச்சர்களான அமித்ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோர் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டதால் மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து அந்த இரு இடங்களும் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டு நேற்று தேர்தல் நடைபெற்றது. பாஜக வேட்பாளர்கள் இருவரும் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

Leave a Reply