மீனவர்களை மீட்க நடவடிக்கை

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ஈரானில் இருந்து தமிழக மீனவர்கள் 681 பேரை மீட்டதற்கு நன்றி என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி ஈரானில் சிக்கியுள்ள மீதமுள்ள 40 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கவும் முதல்வர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வரின் இந்த கடிதத்தை அடுத்து ஈரானில் சிக்கியுள்ள மீதமுள்ள 40 மீனவர்களையும் மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply