இணையதளம் இல்லாமல் செல்போனில் ஃபேஸ்புக் உபயோகப்படுத்தும் புதிய முறை ஒன்றை பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக்கை மட்டும் பயன்படுத்துவதற்கென ஒரு தனி திட்டத்தை அறிவித்துள்ள பி.எஸ்.என்.எல், 3 நாட்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்து ரூ.4 மட்டுமே வசூல் செய்கிறது. மேலும் ரூ.10 கட்டணத்தில் ஒரு வாரத்திற்கு ஃபேஸ்புக்கை பயன்படுத்தலாம். ரூ.20 செலுத்தினால் ஒரு மாதத்திற்கு பயன்படுத்தலாம்.
இந்த புதிய திட்டம் ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ரூ.500,1,000 என செலவழித்து இண்டர்நெட் இணைப்பு வாங்கி ஃபேஸ்புக் பயன்படுத்தும் நிலை இனி இல்லை. வெறும் ரூ.20 மட்டுமே செலுத்தி மாதம் முழுவதும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஃபேஸ்புக் பயன்படுத்தலாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.