வீர் சக்ரா விருதுக்கு அபிநந்தன் பெயர் பரிந்துரை!


போர் காலத்தில் சிறப்பான பணிக்காக வழங்கப்படும் வீர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு இந்த விருது கிடைக்க வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சமீபத்தில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்திய வீரதீர செயலுக்காக அபிநந்தன் பெயரை வீர் சக்ராவிருதுக்காக இந்திய விமானப்படை பரிந்துரை செய்தது

பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா விருதுகளுக்கு அடுத்து வழங்கப்படும் உயரிய விருது வீர் சக்ரா என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply