வீட்டுக்கே வருகிறது திருக்குறள்: அமைச்சரின் அசத்தல் ஏற்பாடு

இனி ஒவ்வொரு நாளும் காலையில் வீட்டுக்கு திருக்குறளில் வரும் வகையில் தமிழக அமைச்சர் விரைவில் ஏற்பாடு செய்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது

திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் குறித்து சமீபத்தில் அரசியல்வாதிகள் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்கள் என்பதும், இதன் தாக்கத்தால் ஒருசில திருவள்ளுவர் சிலைகள் அவமதிப்பு செய்யப்பட்டதும் தெரிந்ததே

இந்த நிலையில் பாஜக பிரமுகர் ஒருவர் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை பிரிண்ட் செய்து ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களும் திருக்குறளை படிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்

இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் விரைவில் முதல்வரிடம் இதுகுறித்து கலந்து ஆலோசித்து, ஆவின் பால் பாக்கெட்டுகளில் தினமும் ஒரு திருக்குறள் பிரிண்ட் செய்ய வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

எனவே ஒவ்வொரு வீட்டிலும் வரும் ஆவின் பால் பாக்கெட்டில் விரைவில் ஒரு திருக்குறள் இருக்கும் என்பதும் அந்தத் திருக்குறளை, பால் பாக்கெட்களை வாங்கும் பொதுமக்கள் தினமும் ஒரு திருக்குறளை படித்து தெரிந்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply