shadow

விஷ பிரசாதம் விவகாரம்: மடாதிபதி காதலியுடன் கைது

கர்நாடக மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கோவில் ஒன்றில் கொடுக்கப்பட்ட பிரசாதத்தில் விஷம் கலந்து இருந்ததால் 15 பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமாக இளைய மடாதிபதி காதலியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைய மடாதிபதியிடம் நடத்திய விசாரணையில் கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற நடந்த போட்டியே பிரசாதத்தில் விஷம் கலக்க காரணம் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இளைய மடாதிபதி மகா தேவசாமி, அவரது காதலி மற்றும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply