shadow

விஷாலின் புதிய படத்தில் நயன்தாரா பட நாயகி

நயன்தாரா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகை ராஷிகண்ணா, விஷாலின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சண்டக்கோழி படத்தை அடுத்து விஷால் அடுத்ததாக நடிக்க இருக்கும் ‘அயோக்யா’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் விஷால், ராஷிகண்ணா முதல்முறையாக ஜோடி சேருகின்றனர். இந்த படத்தை வெங்கட்மோகன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளார். இவர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது

‘அயோக்யா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் விஷாலின் ‘சண்டக்கோழி’ வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளியாகவுள்ளது.

Leave a Reply