shadow

விராட் கோஹ்லியின் அபார சதத்தால் இந்தியா த்ரில் வெற்றி !

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றது.
இதனை அடுத்து அடிலெய்டில் இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர் முடிவில் 9 விக்கட்டுக்கு 298 ரன்களை குவித்தது.அதிகபட்சமாக மார்ஷ் 131 , மாக்ஸ்வெல் 48 மற்றும் ஸ்டோனிஸ் 29 ரன்களையும் குவித்தனர்.இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 49.2 ஓவர்களில் 4 விக்கட்டுக்கு 299 ரன்களை குவித்து வேற்று பெற்றது.அதிகபட்சமாக விராட் கோஹ்லி 104 , டோனி 55 மற்றும் ரோஹித் 43 ரன்களை குவித்தனர்.

மேலும் மூன்றாவது போட்டி வரும் 18 ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடக்க உள்ளது.இந்த போட்டியில் வெற்றிபெறும் அணியே தொடரை கைப்பற்றும்.

Leave a Reply