விமர்சனம் செய்வதால் குடிநீர் வந்துவிடாது: அமைச்சர் உதயகுமார்

எதிர்க்கட்சிகள் அரசை விமர்சனம் செய்வதால் குடிநீர் வந்துவிடாது என்றும் அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை, திருமங்கலத்தில் தியாகி விஸ்வநாததாஸின்133வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை அமைச்சர் உதயகுமார் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியபோது, ‘குடிநீர் பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் எதுவும் செய்யாதது போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply