விநாயகர் சதுர்த்தி: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
வரும் 13ஆம் தேதி இந்தியா முழுவதும் வெகு சிறப்பாக விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் விநாயகர் சிலைகள் வைக்கவும், கரைக்கவும் தமிழக அரசு சில நிபந்தனைகள் விதித்துள்ளது.
இவ்வாறு அரசு விதித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது விநாயகர் சிலைகள் வைக்கவும், கரைக்கவும் நிபந்தனைகள் விதித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே நிபந்தனைகளை விதித்த அரசாணையை ரத்து செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.