shadow

விஜய்மல்லையா, நீரவ் மோடியை அடுத்து இன்னொரு தொழிலதிபர் தப்பி ஓட்டம்

விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி ஆகியோர் இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்ட நிலையில் தற்போது இன்னொரு தொழிலதிபர் சுமார் ரூ.5000 கோடி கடன்பெற்றுவிட்டு நைஜீரியா நாட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

குஜராத்தை சேர்ந்த மருந்து வியாபாரம் செய்து வரும் தொழிலதிபர் நிதின் சந்தேசரா, என்பவர் ஆந்திர வங்கியில் ரூ.5 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தப்பியோடிய தொழிலதிபர் நிதின் சந்தேசரா, தற்போது நைஜீரிய நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது நைஜீரியாவில் இருந்து கைதிகளை இந்தியாவிற்கு அனுப்ப இதுவரை, எந்த ஒப்பந்தமும் கிடையாது என்பதால் நைஜீரியாவை இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply