விஜயகாந்த்தின் அதிரடி முடிவை கிண்டல் செய்த ஓபிஎஸ்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிண்டலடித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் இருந்து விஜயகாந்த் பின்வாங்காமல் உறுதியாக இருக்க வேண்டும் என்று இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
மேலும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்தால், முதல்வருடன் கலந்து ஆலோசித்து கலந்து கொள்வோம் என்றும் அவர் மேலும் கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.