விக்கிரவாண்டியில் உதயநிதி-விஜயபிரபாகரன் போட்டியா? இளம் ரத்தங்கள் மோதலால் பரபரப்பு

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்த நிலையில் தற்போது விக்கிரவாண்டி விஐபி தொகுதியாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என திமுக எம்பி விருப்ப மனு கொடுத்துள்ள நிலையில் உதயநிதி போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டால் இந்த தொகுதியில் தேமுதிகவின் சார்பில் விஜயபிரபாகரனை போட்டியிட வைக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

உதயநிதி மற்றும் விஜய பிரபாகரன் ஆகிய இரண்டு அரசியல் வாரிசுகளான இளம் ரத்தங்கள் மோதினால் அந்த தொகுதியில் பிரச்சாரம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply