வாழும் மகாத்மா வாஜ்பாய்: தமிழிசை உருக்கம்
பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறியிருக்கும் நிலையில் பிரதமர் மோடி , துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்பட பல தலைவர்கள் வாஜ்பாய் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்
இந்த நிலையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் வாஜ்பாய் குறித்து கூறியபோது, ‘மரியாதைக்குரிய முன்னாள் பாரத பிரதமர், வாழும் மகாத்மா மிக சிறந்த ஆட்சியை நாட்டு மக்களுக்கு வழங்கிய, நம் அனைவரும் பெரிதும் நேசிக்கும் ஒப்பற்ற தலைவர் திரு. வாஜ்பாய் அவர்களின் உடல் நிலை மேலும் பின்னடைந்துள்ளது என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது.
அவர் நலம் பெறுவது தான் நம் அனைவருக்கும் ஆத்ம பலம் தரும் என்பது தான் உண்மை, அவர் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன், இந்நேரத்தில் நம் அனைவரும் கூட்டு பிரார்த்தனை நடத்துவோம் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.