shadow

3 copyசவால் நிறைந்த பணியை எளிதாக நிறைவேற்றும் மேஷ ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய், ராசிக்கு ஆறாம் இடத்தில் அனுகூலமாக உள்ளார். சுக்கிரன் ராசியில் இடம்பெற்று உங்களின் செயல்திறன் பரிமளிக்க உதவுகிறார். புதியவர்களின் நட்பு வாழ்வில் முக்கிய நன்மைகளை பெற வைக்கும். சமூகப் பணியிலும் ஓரளவு ஈடுபடுவீர்கள். வாகன பயன்பாடு சராசரி அளவில் இருக்கும்.புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். எதிரி, தன் சொந்த சிரமங்களால் விலகுவார். இல்லறத்துணை, உங்களின் சொல் மதித்து நடந்து குடும்பத்தின் ஒற்றுமை காத்திடுவார். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற சில மாற்றத்தை பின்பற்றுவீர்கள். பணியாளர் கூடுதல் வேலைவாய்ப்பை மனமுவந்து ஏற்றுக்கொள்வர். பெண்கள் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கியத்துவம் தருவர். மாணவர்கள், உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு வகை தவிர்க்கவும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதுடன், இயலாதவர்க்கு உதவுவதால் வாழ்வு சிறப்பாக அமையும்.

தன்னம்பிக்கையும் செயலில் உறுதியும் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன், பன்னிரெண்டாம் இடத்தில் அனுகூலமாக உள்ளார்.குரு, சனி, ராகு அதிக நற்பலன் தருகின்றனர். மனதில் உற்சாகம், செயல்களில் திறமை நிறைந்திருக்கும். வாழ்வு சிறக்க எதிர்பார்த்த சில நன்மை தேடிவரும். சிலருக்கு போட்டி பந்தயத்தில் வெற்றி வாய்ப்பு ஏற்படும். தம்பி, தங்கையின் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்திட உங்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். வாகனத்தில் நிதானம் பின்பற்றவும். புத்திரரின் தவறுகளை இதமான அணுகுமுறையால் சரி செய்வது நல்லது. நீண்ட நாள் பணக்கடன் வசூலாகும். உடல் நலம் ஆரோக்கியம் பெறும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். தொழில் வியாபாரத்தில் இடையூறு விலகி வளர்ச்சி முகம் காண்பீர்கள். பணியாளர்களின் பொறுப்பான செயலுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பு, தாராள பணவசதி கிடைத்து மகிழ்ச்சியான வாழ்வு நடத்துவர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம்: 14.6.14 நள்ளிரவு 12:01மணி முதல் 15.6.14 மாலை 4:52 மணி வரை

பரிகாரம்: அஷ்டலட்சுமி வழிபாடு நடத்துவதுடன், ஏழைப்பெண் குழந்தைக்கு உணவு வழங்குவது நன்மைதரும்.

உறவினர்களிடம் அன்பு, பாசத்துடன் பழகும் மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் புதன், ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் அனுகூலக் குறைவாக உள்ளார்.
சுக்கிரன், கேது ஆதாய ஸ்தான அமர்வில் அளப்பரிய நற்பலன் தருகின்றனர். மனதில் குழப்பமும், செயல்களில் தடங்கலும் சிறு அளவில் இருக்கும். எதிர்பாராத வகையில் பெண்களின் உதவி கிடைத்து சில நன்மை பெறுவீர்கள். வாகன பராமரிப்பு மேற்கொள்வதால் பயணமுறை எளிதாகும். புத்திரரின் எதிர்கால நலன் சிறக்க சில திட்டங்களை பரிசீலனை செய்வீர்கள். எதிரி நேரம் பார்த்து கெடுதல் செய்ய முயற்சிப்பர். கவனம் தேவை. இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். தொழிலில் சராசரி உற்பத்தி விற்பனை இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை சரியாக பின்பற்றுவர். பெண்கள், சேமிப்பு பணத்தில் குடும்பத்தின் சிறுசெலவு மேற்கொள்வர். மாணவர்கள் நண்பர்களிடம் நிதானித்து பேசவும்.

சந்திராஷ்டமம்:
15.6.14 மாலை 4:53 மணி முதல்17.6.14 இரவு 8:27 மணி வரை

பரிகாரம்: நவகிரக வழிபாடு செய்வதுடன்,காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கலாம்.

தன்னைச் சார்ந்தவர்களுக்கு இயன்ற அளவில் உதவும் கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் சந்திரன், வார துவக்கத்தில் அனுகூல பலன் தருகிறார். செவ்வாய், சூரியன், புதன் முழு அளவில் நற்பலன் வழங்குகின்றனர். உறவினர்களிடம் உங்கள் மீது இருந்த மனஸ்தாபம் விலகி அன்பு மலரும்.உறவினர் வருகையும், அவர்கள் வீட்டிற்கு உங்களை அழைப்பதுமான நல்ல நிகழ்வு ஏற்படும். வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். புத்திரரின் அறிவுத்திறன் வளர்ந்து, படிப்பு, செயலில் முன்னேற்றம் அடைவர். எதிரியால் உருவாகிற தொல்லை பலமிழந்து போகும். இல்லறத்துணையின் சிறு தவறுகளை பொறுத்துக் கொள்வதால் ஒற்றுமை பலப்படும். தொழிலில் அபிவிருத்தி பணிபுரிய தாராள பணவசதி துணை நிற்கும். அரசுப்பணியாளருக்கு தாமதமான சலுகை எளிய முயற்சியால் பெறலாம். பெண்கள், கணவரிடம் கருத்து வேறுபாடு வராத அளவில் குடும்ப நலனில் அக்கறை கொள்ளவும். மாணவர்கள், அதிக விலையுள்ள பொருள்களை கவனமுடன் பயன்படுத்தவும்.

சந்திராஷ்டமம்: 17.6.14 இரவு 8:28 மணி முதல்19.6.14 இரவு 9:32 மணி வரை

பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கையம்மன் வழிபாடு செய்வதுடன், உடன் பிறந்தவர்க்கு உதவுவது நல்லது.

சிறு செயலிலும் அக்கறையுடன் ஈடுபடும் சிம்ம ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் சூரியன், ராசிக்கு பத்தாம் இடத்தில் அனுகூலமாக உள்ளார். செவ்வாய்,கேது தவிர மற்ற கிரகங்கள் அளப்பரிய வகையில் நற்பலன் வழங்குகின்றனர். சான்றோர்களின் ஆசி கிடைக்கும். மனதில் உதித்த திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவீர்கள். பணவசதி திருப்திகர அளவில் கிடைக்கும். நம்பகக் குறைவானவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர் நண்பருக்கு இணையாக பழகி அற்புதமான கருத்துகளை பகிர்ந்து கொள்வர். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். இல்லறத்துணை, உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான அரசு உதவி கிடைக்கும். பணியாளர் கூடுதல் வேலைவாய்ப்பு திருப்திகர அளவில் சன்மானம் பெறுவர். பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் நலன் சிறக்க, தேவையான பணி மேற்கொள்வர். மாணவர்கள், பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்லக்கூடாது.

சந்திராஷ்டமம்: 19.6.14 இரவு 9:33 மணிமுதல் 21.6.14 நள்ளிரவு 1:33 மணி வரை.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதுடன், ஏழை மாணவரின் படிப்பு மேம்பட உதவலாம்.

உயர்ந்த எண்ணங்களை மனதில் நாளும் வளர்த்திடும் கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக்கிரன், தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே நற்பலன் தருகின்றனர். மற்ற கிரகங்கள் எதிர்மறையாக செயல்படுகின்றனர். புதிய முதலீடு வகையில் பரிசீலனை அவசியம். வீண் பெருமையால் பணச்செலவு அதிகரிக்கலாம். கவனம் தேவை. பொது இடங்களில் அதிக நேரம் வேடிக்கை பார்க்க கூடாது. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரரின் சேர்க்கை சகவாசம் அறிந்து தேவையான அறிவுரை சொல்வீர்கள். எதிரியினால் வரும் சிரமம் சரி செய்ய சிலரது உதவி பெற வேண்டியதிருக்கும். இல்லறத்துணை உங்களின் மன சஞ்சலம் தீர நல்வழி சொல்வார். தொழில், வியாபார நடைமுறை தாமதகதியில் இயங்கும். பணியாளர், அத்தியாவசிய செலவுக்கு பணக்கடன் பெற வேண்டியதிருக்கும். பெண்கள், குடும்ப பணவரவுக்கேற்ப செலவு செய்வர். மாணவர்கள், ஆசிரியரின் அறிவுரையை மதித்து நடப்பது நன்மை தரும்.

பரிகாரம்: விஷ்ணு பகவானை வழிபடுவதுடன், இல்லறத்துணை விரும்பிய பொருளை வாங்கித் தரலாம்.

பணி இலக்கை சமயோசிதமாக நிறைவேற்றும் துலாம் ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் உள்ள புதன், ஒன்பதாம் இடத்தில் உள்ள குரு நற்பலன் வழங்குகின்றனர். பழகுபவர்களில் சிலர் உங்களை புகழ்ந்து பேசி சுய லாபம் பெற முயற்சிப்பர். அவர்களிடம் விலகுவதால் மனதில் கர்வம் வளராமல் தவிர்க்கலாம். புதிய பணிகளை மேற்கொள்வதில் நிதானமும், சாதக சூழ்நிலையும் உணர்ந்து செயல்பட வேண்டும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு மனதில் உற்சாகம் தரும். புத்திரர் சொல் கேட்டு நடந்து பெருமை தேடித் தருவர். எதிர்பாளரின் போக்கு உணர்ந்து நடந்து கொள்வீர்கள். இல்லறத்துணையிடம் வாக்குவாதம் பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராக இருக்கும். பணியாளர் கூடுதல் வேலை வாய்ப்பை குடும்பத்தின் பணச்செலவு கருதி ஏற்றுக் கொள்வீர்கள். பெண்கள், உறவினர் குடும்ப விவகாரங்களில் கருத்து சொல்ல வேண்டாம். மாணவர்கள் புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுவதுடன், பலாப்பழம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்கலாம்.

நண்பரின் கருத்துக்கு உரிய மரியாதை தரும் விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய், பதினொன்றாம் இடத்தில் அனுகூலமாக உள்ளார். ராசிக்கு ஆறாம் இடத்தில் உள்ள கேதுவை, நட்பு கிரகம் செவ்வாய் எட்டாம் பார்வையாக பார்க்கிறார். இதனால் கடந்த காலங்களில் விலகிய சொந்தமும், நட்பும் உங்களை தேடி வரும். மன மகிழ்ச்சியுடன் பணியில் ஈடுபடுவீர்கள். பணவரவுக்கேற்ப செலவுகளில் சிக்கனம் இருக்கும். புத்திரரின் அறிவார்ந்த செயலை பாராட்டுவீர்கள். பூர்வ சொத்தில் வருமானம் அதிகரிக்கும். எதிரியிடம் சமயோசிதமாக விலகுவீர்கள். இல்லறத்துணையின் குளறுபடியான செயலை இனிய அணுகுமுறையால் சரி செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைய, மாற்று உபாயம் நன்மை தரும். பெண்கள, நகை இரவல் கொடுக்க வாங்க கூடாது. மாணவர்கள், தியானம், தெய்வ வழிபாடு மேற்கொள்வதால் படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதுடன், சிவனடியாருக்கு வஸ்திர தானம் வழங்கலாம்.

வெற்றியினால் வரும் நற்பலனை பணிவுடன் ஏற்கும் தனுசு ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் குரு, ஏழாம் இடத்தில் அனுகூலமாக உள்ளார். நவகிரகங்களில் செவ்வாய், கேது தவிர, மற்ற கிரகங்கள் கூடுதலாக நற்பலன் வழங்குகின்றனர். உங்களின் புத்திசாலித்தனமும், செயல்திறனும் பார்த்து, நண்பர்கள் பாராட்டுவர். ஓய்வை தவிர்த்து, உழைப்பில் ஆர்வம் கொள்வீர்கள்.
தாராள பணவரவில் குடும்பத்தேவை பூர்த்தியாகும். சிலர், வீடு, வாகனம் வாங்க, நல்யோகம் கூடிவரும். புத்திரரின் உடல் நலத்தில் உரிய கவனம் வேண்டும். இல்லறத்துணை ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணியாளர்கள், சலுகைப்பயன் எளிதில் கிடைத்து மனம் மகிழ்வர்.குடும்ப பெண்கள், பிரார்த்தனை நிறைவேறி, இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள், நண்பரின் உதவியால் படிப்பில் முன்னேற்றமான இலக்கை அடைவர்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதுடன், படிப்பில் சிறந்த மாணவருக்கு நோட்டு, புத்தகம் வழங்கலாம்.

செயல்களில் நியாயம், தர்மம் மிகுந்த மகர ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் உள்ள சுக்கிரன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே நற்பலன் தருகின்றனர். தன்னிடம் பழகுபவர்களின் எண்ணங்களை உணர்ந்து பேசுவது நல்லது. தாமதமான பணியை மனஉறுதியுடன் நிறைவேற்றுவதால், சில நன்மை தேடிவரும். உடன் பிறந்தவர் ஓரளவு உதவுவர். வீடு, வாகனத்தில் சிலமாற்றங்களை பின்பற்றுவீர்கள். புத்திரர் படிப்பு, செயல்திறனில் சிறந்து விளங்குவர். சொத்து ஆவணம் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். இல்லறத்துணையின் அன்பு நிறைந்த ஆறுதல் வார்த்தை புதிய நம்பிக்கையைத் தரும். தொழிலில் அளவான மூலதனம், அதிக உழைப்பு என்கிற நடைமுறை நல்லது. பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள், பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள், பெற்றோர் சொல் மதித்து நடப்பது நற்பெயரை பாதுகாக்கும்.

பரிகாரம்: அம்மன் கோவிலில், சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கலாம்.

சிறு நன்மையையும், பெரிதென போற்றுகின்ற கும்ப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக்கிரன், கேது, புதன், குரு அனுகூலபலன் வழங்குகிற இடங்களில் உள்ளனர். நண்பர்களின் கூடுதல் அன்பு, உதவி கிடைத்து புதிய பணிகளை துவக்குவீர்கள். இஷ்ட தெய்வ அருள் பலமும் துணை நிற்கும். வெளியூர் பயணம் நன்மை தருவதாக இருக்கும். உறவினர்களின் வருகை, வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். புத்திரர் படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றமான இடத்தை பிடிப்பர். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணை, உங்களின் சமூக அந்தஸ்து அதிகரிக்க உரிய வழிகாட்டுதல் தருவார். தொழில், வியாபாரத்தில் சில மாற்றங்களை பின்பற்றுவீர்கள். உற்பத்தி, விற்பனை சீராகும். உத்தியோகஸ்தர், பணியாளர்களை ஊக்கப்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பர். பெண்கள், பணவசதிக்கேற்ப வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மாணவர்களின் படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும்.

பரிகாரம்:
சனி பகவானை வழிபடுவதுடன், ஊனமுற்ற ஏழைக்கு உதவலாம்.

திட்டம் நிறைவேற கண்ணும் கருத்துமாக செயல்படும் மீன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன், மூன்றாம் இடத்தில் சூரியன் அனுகூலமாக உள்ளனர். வாக்கு ஸ்தானத்தில் உள்ள சுக்கிரனை, சனி, ராகு, செவ்வாய் பார்க்கின்றனர். பேசும் வார்த்தை சிறப்பாக இருப்பினும், இடம், சூழ்நிலை உணர்ந்து பேசுவது நன்மை தரும். பொறாமை குணம் உள்ள சிலர், நேரம் பார்த்து உங்களை அவமானப்படுத்த முயற்சி செய்வர். கவனம் தேவை. பூர்வ சொத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புத்திரர் நல்ல குணநலன் பின்பற்றுவர். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, சமரச பேச்சு வார்த்தையில் சுமுகத்தீர்வு உருவாகும். இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர், கூடுதல் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறை தாமதமின்றி சரி செய்வீர்கள். பணியாளர்கள், பணியிடத்தில் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பெண்கள், குடும்ப ஒற்றுமையை கண்ணும் கருத்துமாக காத்திடுவர். மாணவர்கள், திட்டமிட்டு படிப்பதால், ஞாபகத்திறன் அதிகரிக்கும்.

பரிகாரம்:
யோக நரசிம்மரை வழிபடுவதுடன், சகதொழில் சார்ந்த நண்பரின் தேவை அறிந்து உதவலாம்.

Leave a Reply