வாட்டர் டேங்கிற்கு பூட்டு: தண்ணீர் திருடுபோகிறதா?

ராஜஸ்தான் மாநிலத்தில் பணம், நகையெல்லாம் பாதுகாப்பாக இருக்கின்றதாம், ஆனால் தண்ணீர் மட்டும் திருடு போவதால் தண்ணீர் தொட்டிகளுக்கு மக்கள் பூட்டு போட்டு வைப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வைஷாலி நகர் பகுதியில் இந்த ஆண்டு கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. பொதுமக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பிளாஸ்டிக் தொட்டிகளில் வைத்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் உள்ளவர்கள் வேலைநிமித்தம் வெளியில் செல்லும்போது தண்ணீர் திருடுபோவதால் அந்த பகுதி மக்கள் தங்களுடைய தண்ணீர் தொட்டிகளுக்கு பூட்டு போட்டு வைப்பதாக கூறியுள்ளனர்.

ஆறு, குளம், ஏரியில் இலவசமாக தண்ணீர் கிடைத்த ஒரு காலம் போய், தற்போது தண்ணீரை திருடும் அளவுக்கு பொதுமக்களின் நிலை ஏற்பட்டுள்ளது

Leave a Reply