shadow

வன்மையாகக் கண்டிக்கிறேன்: சர்காருக்கு எதிரான போராட்டம் குறித்து ரஜினிகாந்த்

விஜய் நடித்த ‘சர்கார்’ பிரச்சனை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழுவினர் சம்மதம் தெரிவித்துள்ளதால் இன்றுடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘சர்கார்’ பிரச்சனை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ‘தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

ரஜினியின் இந்த டுவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் உள்பட பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நேற்றிரவு கமல்ஹாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் சர்கார் படகுழுவினர்களுக்கு ஆதரவாக ஒரு டுவீட்டை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply