லாஸ்லியாவுக்கு போட்டியாக களமிறங்கும் புதிய போட்டியாளர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்

இதனை அடுத்து தற்போது 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் கவின் மற்றும் லாஸ்லியா ஆகியோர் கடைசி வரை நீடிக்கும் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்றும் இருவரில் ஒருவர் இந்த சீசனின் சாம்பியன் பட்டம் பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

இந்த நிலையில் லாஸ்லியாவுக்கு கடும் போட்டி கொடுக்கும் வகையில் ஆல்யா மானஸா பிக்பாஸ் வீட்டில் களமிறங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காகத்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் அவசரமாக முடிந்ததாகவும் தெரிகிறது

ஆல்யா மானஸா களமிறங்கினால் லாஸ்லியாவுக்கு கடும் போட்டியாளராக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply