லாரி வேலை நிறுத்தம்: தமிழக அரசு தலையிட கனிமொழி கோரிக்கை
தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பிரச்சனையில் தமிழக அரசு தலையிட வேண்டும் என திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ‘ஒட்டு மொத்த சென்னை நகரமே தங்கள் குடிநீர் தேவைக்காக இந்த லாரிகளை நம்பியிருக்கும் வேளையில், ‘லாரிகள் வேலை நிறுத்தம்’ பொதுமக்களை மிகக் கடுமையான சிரமங்களுக்கு ஆளாக்கும்.ஆகவே தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, இதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஒட்டு மொத்த சென்னை நகரமே தங்கள் குடிநீர் தேவைக்காக இந்த லாரிகளை நம்பியிருக்கும் வேளையில், 'லாரிகள் வேலை நிறுத்தம்' பொதுமக்களை மிகக் கடுமையான சிரமங்களுக்கு ஆளாக்கும்.ஆகவே தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, இதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.#WaterScarcity #Chennai pic.twitter.com/gHVR7RppWp
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 7, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.