லலிதா ஜூவல்லரி கொள்ளைக்கு உதவிய சீரியல்!
லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்து கொள்ளையர்களை தமிழக போலீசார் இரண்டே நாட்களில் பிடித்து சாதனை செய்துள்ள நிலைய்ல் பிடிபட்ட மணிகண்டன் என்பரிடம் போலீசார் நேற்று விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது
அதன்படி இந்த விசாரணையில், கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகன் என்பவர் பிரபல வீடியோ தளத்தில் வரும் ஒரு புகழ்பெற்ற தொடரை தொடர்ந்து பார்ப்பார் என்றும், அந்த தொடரில் வரும் கொள்ளையர்கள் அணிந்துள்ள ஆடையை போலத்தான் இவர்களும் கொள்ளையின் போது ஆடை அணிந்திருந்தனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அந்த தொடரில் வரும் முக்கிய கொள்ளையன் ஓடும் வாகனத்தில் தான், வாழ்க்கையை நடத்துவார். அதே போன்று முருகனும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒருசீரியலை பார்த்து அதன் தாக்கத்தல் தான் கொள்ளையர்களுக்கு இந்த ஐடியாவே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.