லதா ரஜினிகாந்த் பள்ளிக்கு திடீர் பூட்டு: மாணவர்கள் திணறல்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வந்த பள்ளிக்கு வாடகை கட்டணம் சரிவர கட்டாததால் பள்ளி கட்டிடத்தின் உரிமையாளர் பள்ளிக்கு பூட்டு போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,.
கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில், லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் பள்ளிக்கு, வாடகை செலுத்தாததால் கட்டிட உரிமையாளர் பலமுறை வாடகை பணத்தை கேட்டுள்ளார். ஆனாலும் வாடகைப்பணம் லதாவிடம் இருந்து வராததால் வேறு வழியின்றி இன்று அவர் பள்ளிக்கு பூட்டு போட்டுவிட்டார்.
இதனால் மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் தற்காலிகமாக மாணவர்கள் வேளச்சேரியில் உள்ள பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து லதா ரஜினி தரப்பினர் கூறியபோது, ‘வாடகை செலுத்தவில்லை என்று வெளியான தகவலில் உண்மை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.