லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆஜராக ஆறுமுகச்சாமி ஆணையம் உத்தரவு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆறுமுகச்சாமி தலைமையிலான ஆணையம் கடந்த ஒரு வருடத்திற்கும் மேல் விசாரணை செய்து வருகிறது.
இந்த நிலையில் ஆறுமுகச்சாமி ஆணையம் முன்பு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஜனவரி 11ஆம் தேதியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஜனவரி 8ஆம் தேதியும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 7ஆம் தேதியும் ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, ஜன 9ஆம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.