ரோஜாவுக்கு நடந்தது அராஜகம்: நடிகை விஜயசாந்தி வேதனை

கட்சிக்காக பாடுபட்ட நடிகை ரோஜாவுக்கு நடந்தது அராஜகம் என நடிகை விஜயசாந்தி தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

இன்று நடிகை விஜயசாந்தி தனது 53வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘”அரசியலில் நடிகைகளை அலட்சியப்படுத்துவதாகவும், அவர்களுடைய உழைப்பிற்கேற்ற மரியாதை கொடுப்பதில்லை.

குறிப்பாக நடிகை ரோஜா 9 ஆண்டுகள் சந்திரபாபு நாயுடு போன்ற அரசியல்வாதியை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்காக போராடினார். அவரை சட்டமன்றத்திலேயே அடியெடுத்து வைக்க விடாமல் எவ்வளவு அராஜகம் செய்தார்கள். துணிந்து போராடிய அவருக்கு ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சர் பதவி கொடுக்காதது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply