ரெட் அலர்ட் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு அதாவது தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு வெளியாகியுள்ளது
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது
இதன்படி சற்றுமுன் நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மற்ற மூன்று மாவட்ட ஆட்சியர்களும் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.