ரூ.5 கோடி நகைகளுடன் மாயமான வங்கி ஊழியரின் பிணம் கண்டெடுப்பு
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.5 கோடி நகைகளுடன் பஞ்சாப் நேஷ்னல் வங்கி அலுவலக உதவியாளர் மாரிமுத்து என்பவர் மாயமான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் ரூ.5 கோடி நகைகளுடன் மாயமான பஞ்சாப் நேஷ்னல் வங்கி அலுவலக உதவியாளர் மாரிமுத்துவின் உடல் மணல்மேல்குடியில் போலிசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மாரிமுத்துவின் உடலை அவரது மனைவி ராணி அடையாளம் காட்டி உறுதி செய்தர். இந்த நிலையில் மாயமான நகைகள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.