ரிசர்வ் செய்த சீட்டில் உட்கார்ந்த வயதான தம்பதியை அடித்து வெளுத்த இளம்பெண்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தானும் தன்னுடைய மூன்று குழந்தைகளும் Cheltenham என்ற நகரிலிருந்து நாட்டிங்காம் என்ற நகருக்குச் செல்ல ரயிலில் 4 விக்கெட்டுகள் ரயிலில் முன்பதிவு செய்திருந்தார்.
அவர் தான் முன்பதிவு செய்த ரயில் பயணம் செய்ய உள்ள ரயிலில் சென்ற போதுதான் முன்பதிவு செய்திருந்த இரண்டு இருக்கைகளில் ஒரு வயதான தம்பதியர் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் இதனையடுத்து அந்த தம்பதியிடம் தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட் இருக்கையில் நீங்கள் உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று கூறியபோது அந்த தம்பதிகள் இதுகுறித்து கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தனர்
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அந்த முதிய தம்பதிகளை கன்னத்தில் அறைந்து தாக்கியதாக தெரிகிறது இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து ரயில்வே அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்த முதிய தம்பதிகளை அதே இடத்தில் உட்கார வைத்துவிட்டு அந்த பெண்ணிற்கும் அவருடைய மூன்று குழந்தைகளுக்கும் மாற்று இருக்கைகளை ஏற்பாடு செய்தார்
இதுகுறித்து அந்த பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த போது அவருக்கு கண்டனங்களும் ஆதரவுடன் மாறி மாறி கிடைத்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.