ராஜீவ் காந்தியை கொல்ல முடிந்த சீமானால் ராஜபக்சேவை ஏன் கொல்ல முடியவில்லை: நெட்டிசன்கள் கேள்வி

அமைதிப்படையை அனுப்பி என் இன மக்களை கொலை செய்த ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று கூறும் சீமான், தமிழ் இன மக்களை ஒட்டுமொத்தமாக அழித்த ராஜபக்சேவை கொலை செய்யாதது ஏன்?

ஒரு பெரிய நாட்டின் தலைவரை கொலை செய்ய முடிந்த சீமான் மற்றும் விடுதலைப்புலிகளால் ஒரு சின்ன நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்ய முடியாதா? ராஜபக்சேவை கொலை செய்ய முடியாமல் அவரது படையினர்களால் விரட்டியடிக்கப்பட்டு, கொல்லப்பட்டவர்கள் தானே பிரபாகரனும் விடுதலைபுலிகளும் என நெட்டிசன்கள் சீமானுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நெட்டிசன்களின் இந்த கேள்விக்கு சீமானும் அவரது கட்சியினர்களும் என்ன பதில் சொல்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply