முக்கிய பேச்சுவார்த்தை நடக்கும் என தகவல்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் ரஷ்யா சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மாஸ்கோ விமான நிலையத்தில் அவரை ரஷ்ய நாட்டு அமைச்சர்களும் அதிகாரிகளும் உற்சாகமாக வரவேற்றனர். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஆகிய இருவரும் ராணுவ ஒத்துழைப்பை மேலும் இரு நாடுகளுக்கு இடையே வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 75வது ஆண்டு விழாவிலும் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே மாநாட்டில் கலந்துகொள்ள சீன பாதுகாப்பு அமைச்சரும் கலந்து கொள்ள வந்துள்ளார் என்பதும் ஆனால் அவரை ராஜ்நாத் சிங் சந்தித்து பேச மாட்டார் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

 

Leave a Reply