இந்திய குழு இன்று ஆய்வு

உலகையே ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக நேற்று ரஷ்ய அதிபர் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்

தனது மகள்கள் இருவருக்கும் இந்த தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் இதுவரை அவருக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து இந்த தடுப்பூசியை இந்தியாவில் பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது

இந்த ஆலோசனைக்கு பின்னர் ரஷ்யாவிடமிருந்து தடுப்பூசியை இந்தியா வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வந்து விட்டால் படிப்படியாக பாதிப்பு குறைந்து வைரஸிலிருந்து விரைவில் முற்றிலும் பொதுமக்கள் விடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply