ரத்ததானம் செய்வதற்காக நோன்பை கைவிட்ட இஸ்லாம் இளைஞர்
இஸ்லாமியர்கள் புனிதமாக கருதும் ரம்ஜான் நோன்பு தற்போது நடைபெற்று வருகிறது. அவர்களுடைய நோன்பு எந்த அளவுக்கு கட்டுப்பாடு உடையது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் 26 வயது அகமது என்பவர் தனது நெருங்கிய இந்து நண்பர் ஒருவருக்கு ரத்தம் தேவை என்பதை அறிந்ததும் நோன்பை கைவிட்டு அவருக்காக ரத்ததானம் செய்துள்ளார். ரத்ததானம் செய்வதைவிட நோன்பு பெரிதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
மதத்தின் பெயரால் கலவரத்தை ஏற்படுத்த ஒருசிலர் முயற்சித்து வரும் நிலையில் இவருடைய இந்த தியாக செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.