ரஜினி-ராகவா லாரன்ஸ் திடீர் சந்திப்பு! காரணம் இதுதான்!
மும்பையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
மும்பையில் ரஜினியின் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பும், ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா’ இந்தி படத்தின் படப்பிடிப்பும் நடந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இந்த சந்திப்பு குறித்து ராகவா தனது டுவிட்டரில் கூறியபோது, ”காஞ்சனா 3′ படத்தின் வெற்றிக்கு பின்னர் எனது குரு ரஜினிகாந்த் அவர்களை மும்பையில் சந்தித்து ஆசி பெற்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது ‘காஞ்சனா 3’ நாயகிகளில் ஒருவரான நடிகை வேதிகாவும் உடனிருந்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.