ரஜினி படத்தில் முதல்முறையாக இணைந்த சிம்ரன் – த்ரிஷா
கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளாக இருந்த சிம்ரனும், தற்போதும் முன்னணி நடிகையாக இருந்து வரும் த்ரிஷாவும் ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற கனவில் இருந்தவர்கள்
இந்த இருவரின் கனவுகள் ஒரே படத்தில் நனவாகியுள்ளது. ஆம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தில் ஏற்கனவே சிம்ரன் நடித்து வரும் நிலையில் தற்போது த்ரிஷாவும் இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா போன்ற பிரபலங்கள் நடித்து வரும் இந்த படத்தில் தற்போது த்ரிஷாவும் இணைந்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
We are happy to announce that for the first time, @trishtrashers will be acting with Superstar Rajini in #SuperstarWithSunPictures@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial pic.twitter.com/HPpOXqUtVz
— Sun Pictures (@sunpictures) August 20, 2018
Leave a Reply
You must be logged in to post a comment.