ரஜினியின் அடுத்த படம் வெற்றியடைய ஏ.ஆர்.முருகதாஸ் பழனியில் சாமி தரிசனம்!


‘சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. அனிருத் இசையில் உருவாகும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10ம் தேதி மும்பையில் தொடங்கவிருக்கிறது.

இந்த நிலையில் ‘தலைவர் 167’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். படம் வெற்றி பெற சிறப்பு பூஜையும் செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பை முழுக்க முழுக்க மும்பை பின்னணியில் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply