யாரோ போஸ்டர் ஒட்டியதற்கு நான் பொறுப்பாக முடியாது: செங்கோட்டையன்

இன்று காலை அதிமுக ஆலோசனை கூட்டம் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தபோது இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுக பொதுச்செயலாளர் என்றும் இல்லையில்லை செங்கோட்டையன் தான் பொதுச்செயலாளர் என்றும் போஸ்டர் யுத்தத்தை அதிமுக தொண்டர்கள் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் போஸ்டர் சர்ச்சை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: யாரோ போஸ்டர் ஒட்டியதற்கு நான் பொறுப்பாக முடியாது; இறுதி மூச்சு இருக்கும் வரை முதல்வர், துணை முதல்வர் தலைமையில் செயல்பட்டு வரும் தலைமைக்கு நேர்மையாக இருப்பேன்

Leave a Reply