shadow

மோடி வருகையை எதிர்த்து எதிர்ப்பு பேரணி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு திமுகவினர் உள்பட பல்வேறு எதிர்க்கட்சியினர் கருப்புக்கொடி காட்டி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தரும் போது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த போவதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூட்டம் ஒன்றில் பேசியபோது, ‘ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து தர மறுக்கும் பிரதமர் மோடி எந்த முகத்தை வைத்துக் கொண்டு இங்கு வருகிறார் என்றும், அவரது வருகையை எதிர்த்து மாநிலம் முழுவதும் பொதுமக்களும், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களும் போராட்டம், எதிர்ப்பு பேரணி ஆகியவற்றை நடத்த வேண்டும் என்றும் பேசினார்.

Leave a Reply