shadow

மோடி-கருணாநிதி திடீர் சந்திப்பு ஏன்? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

பிரதமர் மோடியின் சென்னை வருகையின்போது தினத்தந்தியின் பவளவிழா, பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சி.எஸ்.சுவாமிநாதனின் இல்லத் திருமண நிகழ்ச்சி மட்டுமே பிரதமரின் சுற்றுப்பயண நிகழ்ச்சிநிரலில் இடம்பெற்றிருந்தன. ஆனால் இதில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு கருணாநிதியை சந்திப்பது என்பது கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

தமிழகத்தில் எடப்பாடி ஆட்சியை காப்பாற்றுவதால் பாஜகவுக்கு எந்த நன்மையும் இல்லை என்ற ரிப்போர்ட் பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற பின்னர்தான் இந்த திடீர் விசிட்டுக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் திமுகவுக்கு காங்கிரஸ் மட்டுமின்றி, பாஜகவும் நெருக்கம் தான் என்பதை காட்டிக்கொள்ளவும் இந்த சந்திப்பு பயன்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் அரசியல் இல்லை என்று இருதரப்பினர்களும் கூறுவதை யாரும் நம்பவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-திமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply