shadow

மோடியை எதிர்த்து விவாதம் செய்ய தகுதி இல்லாதவர் ராகுல்காந்தி: சுப்பிரமணியம் சுவாமி

பிரதமர் நரேந்திர மோடியுடன் எதிர்த்து நின்று விவாதம் செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தகுதி இல்லாதவர் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சுவாமி, ‘ரஃபேல் விவகாரம் குறித்து தம்முடன் விவாதிக்க மோடி தயாரா என்று ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ‘பிரதமர் மோடியுடன், பிரதமர் பதவி வேட்பாளராகக் கூட அவரால் போட்டியிட முடியாது என்று கூறினார்.

மேலும் பாஜகவின் பேச்சாளர் சம்பித் பத்தராவிற்கு முதலில் ராகுல் பதில் சொல்லட்டும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு என்றுமே சொந்த புத்தி கிடையாது என்றும், அவர் குற்றம் சாட்டினார்.

Leave a Reply