shadow

தமிழகத்தில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மே 1ஆம் தேதியும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது

இந்த பரிந்துரைக்கு தமிழக அரசு தற்போது பதிலளித்துள்ளது. மே ஒன்றாம் தேதி ஏற்கனவே மே தினம் என்ற பொது விடுமுறை நாள் என்பதால் ஊரடங்கு தேவையில்லை என்றும் மே இரண்டாம் தேதி வழக்கமான ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

இருப்பினும் ஊரடங்கு குறித்து நாளை கருத்து தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இந்த வழக்கை நாளை ஒத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply