shadow

மேல்முறையீடு இல்லை என தினகரன் முடிவு செய்தது ஏன்?

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று மேல்முறையீடு இல்லை என தினகரன் அறிவித்தார். இந்த திடீர் அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இந்த அறிவிப்புக்கு பின் திமுக தலைவர் ஸ்டாலின் இருப்பதாக அதிமுக நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் ஸ்டாலின் மற்றும் தினகரன் ரகசியமாக சந்தித்ததாகவும், இந்த சந்திப்புக்கு பின்னரே மேல்முறையீடு இல்லை என்ற முடிவை தினகரன் எடுத்துள்ளதாகவும் அந்த நாளேடு கூறியுள்ளது.

ஆனால் இந்த செய்தியில் உண்மை இருக்க வாய்ப்பு இல்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும் என அமமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் விரும்பியுள்ள போதிலும் ரகசிய சந்திப்பால் இந்த மாற்றம் என்பதை ஏற்க முடியாது என்று கூறி வருகின்றனர்.

Leave a Reply